இலங்கை தபால் திணைக்களத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நீண்டகாலமாகப் தற்காலிகமாகப் பணியாற்றி வந்த 192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாட
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள அன்வர் வித்தியாலயத்தில் சுற்றாடல் செயல்பாடுகள் தொடர்பான கண்காட்சி முகாம் அண்மையில் (11) இடம்பெற்றது.
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வு
2026 ஜூன் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜூன் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கொழும்பு மாவட்ட விளையாட்டுத்துறையின் முற்போக்கு மீளாய்வு; எதிர்கால நடவடிக்கைகளுக்காக விசேட விளையாட்டு உபகுழு நியமனம்!
இத்தருணத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதை விட, நோயைத் தடுப்பதே எமக்குள்ள மிக முக்கியமான தேவையாகும்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 2026 ஜூன் 16 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
2026-2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) என்பது, 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டலுக்கு இணங்க, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதையும், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு முதன்மையான தேசிய வேலைத்திட்டமாகும். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைமையின் கீழும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், 2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சியமான மற்றும் யதார்த்தமான ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதற்கும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய, 2026 மே 4 அன்று அமைச்சரவையினால் இத்திட்டம் உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவையாற்றும் ஒரு போட்டித்தன்மைமிக்க, விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த மூலோபாயத் திட்டம் ஆறு 'கிடைமட்டப் பிரிவுகள்' (Horizontals) மற்றும் எட்டு 'முன்னுரிமைப் பிரிவுகள்' (Verticals) ஆகிய இரண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசியத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்களித்துள்ளனர். வலுவான நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த சிறப்பான ஆரம்ப விழாவில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க அவர்கள், கௌரவ தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்கள், கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்கள் மற்றும் கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அவர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அவர்கள், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அவர்கள் உட்பட பல அமைச்சுகளின் செயலாளர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மேலாண்மைப் பணிப்பாளர் ஷானன் கௌலின் (Shannon Cowlin) அவர்கள், சிரேஷ்ட பொதுத்துறை பொருளாதார நிபுணர் நைடா முக்தார் (Nyda Mukhtar) அவர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க அவர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்கள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் உள்ளிட்ட பல கௌரவ விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, 2026 ஜூன் 12 அன்று வெளிநாட்டு
இந்தியாவினால் இலங்கை இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் நேற்று முன்தினம் (16 ஜூன்) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டை, பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
