மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
ஒவ்வொரு துறையிலும் நாட்டுக்குத் தேவையான தலைவர்களை உருவாக்காமல் இந்த நாட்டை மாற்ற முடியாது என்ற உண்மையை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, கல்வித் துறையை சரியான திசைக்கு கொண்டுவர நாம் முன்னுரிமை அளித்து செயற்படுகிறோம்.
கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதல் கட்டமாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு முழுமையடையாத உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவும், வெற்றிடங்களை நிரப்பவும், தற்போதுள்ள பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
கடந்த காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் விடுதி வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. அதற்கு நிதி அல்லது வேறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகளைத் தீர்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஹார்டி நிறுவனத்தைப் போலவே, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்துவம் உள்ளது. அந்த நிலையைப் பாதுகாத்து உயர்ந்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட பல நிறுவனங்கள் உள்ளன, அந்த நிறுவனங்கள் தங்கள் தனித்துவத்தைப் பாதுகாத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வியில் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்போம். இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் ஹார்டி கல்வி நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
உயர்கல்விக்குப் பின்னர், அதிக மாணவர்கள் தொழிற்கல்விக்கு செல்கின்றனர், எனவே, தற்போதைய தொழிற்சந்தைக்கு மட்டுமன்றி, எதிர்கால தொழிற்சந்தைக்கும், பொருத்தமான மனித வளத்தை உருவாக்குவது அவசியம்.
இந்த நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து நாம் திருப்தி அடைய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவனங்களின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு
அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய, கால்நடை வளங்கள்,காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நிர்மாணம்,வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு 10 நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் நேற்று (12) ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை தந்திருந்தனர்.
2024 நவம்பர் மாதத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக 2025.03.11 அன்றிலிருந்து 53,511 விவசாயிகளுக்கு 61,071 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக 952 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2025 மார்ச் 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
“2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.03.14ம் திகதி வெள்ளிக் கிழமை நிறைவடையும்.
- முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக எமது நாட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மார்ச் 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகசவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் நடத்தும் நோக்கில் கமத்தொழில் அமைச்சின் வளாகத்தில் ஒரு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.
சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]