2025 மே மாதம் 04 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மே மாதம் 04 ஆம் காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணியளவில் அதன் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக காற்றினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.