All Stories

நில்வளா நதி சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நில்வளா நதியை சுத்தப்படுத்தும் “SAVE NILWALA” திட்டம், மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நேற்று (13) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நில்வளா நதி சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக 'எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்' சுற்றுலா மையம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக 'எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்' சுற்றுலா மையம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025" தொடர்பான கலந்துரையாடல்

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025"தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 12ம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025" தொடர்பான கலந்துரையாடல்

இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்

தூய இலங்கை' திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பு

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'தூய இலங்கை' திட்டத்திற்கமைய, 12,500 க்கும் மேற்பட்ட படையினர் 2025 பெப்ரவரி 20 முதல் 2025 மார்ச் 07 வரை 380 பாடசாலைகளில் சுத்தம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டு புனரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

தூய இலங்கை' திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

இன்றைய அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய அறிக்கை

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

ஒவ்வொரு துறையிலும் நாட்டுக்குத் தேவையான தலைவர்களை உருவாக்காமல் இந்த நாட்டை மாற்ற முடியாது என்ற உண்மையை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, கல்வித் துறையை சரியான திசைக்கு கொண்டுவர நாம் முன்னுரிமை அளித்து செயற்படுகிறோம்.

கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதல் கட்டமாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு முழுமையடையாத உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவும், வெற்றிடங்களை நிரப்பவும், தற்போதுள்ள பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் விடுதி வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. அதற்கு நிதி அல்லது வேறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகளைத் தீர்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஹார்டி நிறுவனத்தைப் போலவே, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்துவம் உள்ளது. அந்த நிலையைப் பாதுகாத்து உயர்ந்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட பல நிறுவனங்கள் உள்ளன, அந்த நிறுவனங்கள் தங்கள் தனித்துவத்தைப் பாதுகாத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வியில் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்போம். இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் ஹார்டி கல்வி நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

உயர்கல்விக்குப் பின்னர், அதிக மாணவர்கள் தொழிற்கல்விக்கு செல்கின்றனர், எனவே, தற்போதைய தொழிற்சந்தைக்கு மட்டுமன்றி, எதிர்கால தொழிற்சந்தைக்கும், பொருத்தமான மனித வளத்தை உருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து நாம் திருப்தி அடைய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவனங்களின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் அவசியம் – ஜனாதிபதியின் செயலாளர்

அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய, கால்நடை வளங்கள்,காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நிர்மாணம்,வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் அவசியம் – ஜனாதிபதியின் செயலாளர்

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC)ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC)ஆதரவு

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு 10 நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் நேற்று (12) ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | editor@news.lk