சுகாதாரத் துறையில் 2014, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட 25 பெரிய அளவிலான திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

சுகாதாரத் துறையில் 2014, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட 25 பெரிய அளவிலான திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
  • :

நாட்டில் சுகாதாரத் துறையில் 2014, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட 25 பெரிய அளவிலான திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து, அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய 76,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்குத் சிறந்த மற்றும் உயர் தரத்திலான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, பல்வேறு முக்கிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறைகளில் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்த 25 பெரிய அளவிலான திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

.இந்த திட்டம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் முழுமையான வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. 

அதன்படி, 2014, 2016, 2017, 2018, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட 25 பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் கீழ், சுகாதார அமைச்சின் பிரதான கட்டிடம் உட்பட, அத்தியாவசியமானவையாகக் கண்டறியப்பட்ட 25 பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூ. 16,000 மில்லியன் தொகையும், 2026 ஆம் ஆண்டில் ரூ. 19,000 மில்லியன் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டில் ரூ. 38,000 மில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 தாய் சேய் நலனை மேம்படுத்துதல், புற்றுநோய் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துதல், இதய மற்றும் தாலசீமியா சிகிச்சை வழங்குதல், சுகாதார அமைச்சின் தலைமையகம் மற்றும் தேசிய நிலையங்களை வலுப்படுத்துதல், அவசரகால சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல், சுகாதாரப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதி, மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவு முகாமைத்துவம் போன்ற துறைகள் தொடர்பான கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

இதன் கீழ், 2019-ல் தொடங்கப்பட்ட டி சொய்சா மகளிர் மருத்துவமனையின் மகப்பேறு (Maternity & Ward Complex) மற்றும் வார்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், அதிநவீன வசதிகளுடன் நிறைவடைந்துள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 389 மில்லியன் ஆகும். 

மேலும், 2017-ல் தொடங்கப்பட்ட லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) 12 மாடிகளைக் கொண்ட "லிட்டில் ஹார்ட் சென்டர்" (Little Heart Centre) கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட உத்தேசத் தொகை ரூ. 6218 மில்லியன் ஆகும். 

2016-ல் ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட கண்டி தேசிய புற்றுநோய் சிகிச்சை (cancer Treatment Unit) பிரிவின் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள 8 மாடிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 400 மில்லியன் ஆகும். மேலும், பதுளை போதனா மருத்துவமனையின் பத்து மாடிக் கட்டிடம் மற்றும் ஆறு மாடி புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக, தற்போதைய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு ரூ. 1,00 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (இரண்டாம் கட்டம்) (Accident & Emergency Treatment Unit - Stage II) கட்டிடம், கரப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவப் பிரிவு (Surgical Medical Unit) (SMU) கட்டிடம், மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டையில் சிறுநீரகப் பராமரிப்புப் பிரிவு (Renal Care Units) (RCU) கட்டிடங்கள் மற்றும் கண்டி தேசிய மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்றுப் பிரிவு (BMT) கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இத்திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டிற்கு ரூ. 175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ல் நிறுத்தப்பட்டிருந்த சுகாதார அமைச்சகத்தின் பிரதான அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 3,00 கோடி ஆகும்.

முல்லேரியாவ தேசிய பக்கவாத மையம், கேகாலை, திருகோணமலை, அம்பாறை, சிலாவ் மற்றும் கண்டி மருத்துவமனைகளில் உள்ள வெளிநோயாளர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் கட்டுமானம் மற்றும் அது தொடர்பான பணிகள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 175 கோடி ஆகும்.

 இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் மருத்துவமனை அமைப்பில் 15 தொற்றுக்கழிவு எரிப்பான்களை நிறுவி இயக்கும் பணி ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இதற்காக அரசாங்கத்திற்கும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகாமை (JICA) இடையேயான ஒரு கூட்டுத் திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும், இரத்தினபுரி மருத்துவமனையில் இதய நோய் பராமரிப்பு வளாகம், களுத்துறையிலுள்ள 4 மாடி தாதியர் கல்வி மற்றும் நிருவாகக் கட்டிடம், அனுராதபுரத்திலுள்ள 6 மாடி தாதியர் கல்லூரி கல்வி மற்றும் நிர்வாகக் கட்டிடம் மற்றும் தாதியர் குடியிருப்புகள், மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர தாதியர் பீடத்திலுள்ள 6 மாடி விடுதிக் கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளும் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. 

மேற்கண்ட திட்டங்களுக்குக் கூடுதலாக, மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குவதற்கும் புனரமைப்பதற்கும் ரூ. 880 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இந்தக் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் விரைவாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே வழங்கியுள்ளார்.

 

Related Articles