உள்நாட்டு நகை உற்பத்தியாளர்களுக்குல வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை ஏற்பாடு செய்யப்பட்ட "தோடு" கண்காட்சித் தொடரின் மூன்றாவது தோடு கண்காட்சி, 2025 ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கண்டி சிட்டி சென்டர் (KCC) வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆபரணக் கண்காட்சியில் கண்டி, காலி, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல ஆபரண உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆபரணக் கண்காட்சியில் உள்நாட்டு நகை உற்பத்தியாளர்களின் பிராந்திய வடிவமைப்புகள் மற்றும் நவீன நகை வடிவமைப்புகள் மிகவும் நியாயமான விலையில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த "தோடு" ஆபரணக் கண்காட்சியின் அடுத்த கட்டம் காலியில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.