பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (27) அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
