சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்
  • :

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் அனுசரணையில் 2025 மே 19 முதல் கொழும்பில் நடைபெறுவதுடன், இதற்கு இணையாக மாநாட்டில் பங்கேற்ற ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் 2025 மே 20 அன்று பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி, சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் தற்போதைய தலைவரான பிரேசிலின் கர்னல் Nilton Gomes Rolim Filho உட்பட ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவை பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது (80) இராணுவ வீரர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், இந்நிகழ்வில் இயக்குநர் கடற்படை விளையாட்டு, கடற்படை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகளும் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]