தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் பயிலுனர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் சட்டவாக்க சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களப் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா அகியோர் வளவாளர்களாக இதில் கலந்துகொண்டனர்.
