All Stories

2026 உலக குடியிருப்பு தின நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

2026 உலக குடியிருப்பு தின நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தின் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் கையொப்பமிடப்பட்டுள்ள கடன் ஒப்பந்தத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 04 பக்கேஜ்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தின் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கண் சத்திரசிகிச்சைகளின் பின்னர் Prednisolone Acetate மருந்தினைப் பயன்படுத்தியதன் மூலம் பார்வையை இழந்த நோயாளர்களுக்கு நட்டஈடு

கண் சத்திரசிகிச்சைகளின் பின்னர் Prednisolone Acetate மருந்தினைப் பயன்படுத்தியதன் மூலம் பார்வையை இழந்த நோயாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கண் சத்திரசிகிச்சைகளின் பின்னர் Prednisolone Acetate மருந்தினைப் பயன்படுத்தியதன் மூலம் பார்வையை இழந்த நோயாளர்களுக்கு நட்டஈடு

பேரூந்துச் சேவையில் கொத்தணி (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம்

எமது நாட்டில் பயணிகள் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய போக்குவரத்து ஊடகமாக பேருந்துப் போக்குவரத்து அமைவதுடன், குறித்த சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் சுயாதீன தனியார் பேருந்து பணிப்பாளர் அதிகளவில் இயங்குகின்றனர்.

 

பயணிகளுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் போது நீண்டகாலமாக இயங்கி வருகின்ற முறைமையால் அதிக போட்டித்தன்மை, திட்டவட்டமான நேர அட்டவணையை கடைப்பிடிப்பதிலுள்ள பலவீனம், வீதிகளில் அதிக பேரூந்துகள் இயங்குகின்றமை, பேரூந்துகளை இயக்குவதில் பாதுகாப்பற்ற நடத்தைகள், பயணிகள் எதிர்கொள்கின்ற சிரமங்கள், மோட்டார் வாகன நெரிசல், சேவையில் காணப்படுகின்ற சமநிலையற்றதன்மை மற்றும் வளங்களை வினைத்திறனற்ற வகையில் பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகள் பல மேலெழுந்துள்ளன.

 

அவ்வாறான பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளாக உலகில் பல நாடுகள் பேரூந்து தொழிற்றுறையில் கொத்தணி (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்தி ஒரே பயணிகள் போக்குவரத்து வழித்தடமாகவோ அல்லது குறித்த பூகோளப் பிரதேசத்தில் இயங்குகின்ற பேரூந்து சேவைகளை ஒருங்கிணைந்த முகாமைத்துவத்தின் கீழ் இயக்குவதாகும். ஒன்றுக்கொன்று தொடர்புபடுகின்ற வீதிகளில் பயணிக்கின்ற பேருந்துச் சேவைகள் தனித்தனி அலகுகளாக அல்லாமல், ஒருங்கிணைந்த சேவைக் கொத்தணியாக முகாமைத்துவம் செய்கின்ற முறைமையாக அமையும் பேரூந்துச் சேவைகளை கொத்தணியாக்கல் முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது பயனுள்ள பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கும், சமகால பேருந்துச் சேவையில் காணப்படும் பெரும்பாலான இயக்கங்கள் மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, முதலாவதாக, பேரூந்து சேவை இலக்கங்கள் 170, 177 மற்றும் 190 ஆகிய பேரூந்து வழித்தடங்களில் சேவை கொத்தணியாக்கல் முன்னோடி வேலைத்திட்டத்திற்குரிய பங்காளர்களின் பங்கெடுப்புடன் அமுல்படுத்துவதற்கும், அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

பேரூந்துச் சேவையில் கொத்தணி (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம்

"விபத்துக்களைக் குறைப்பதற்காக தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்" - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான பிரதான காரணியாகவும், தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் ஊனங்களைப் பாதிக்கும் முக்கிய காரணியாகவும் இனங்காணப்பட்டுள்ள விபத்துகளைக் குறைப்பதற்கான தேசிய முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், பதினொன்றாவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை ஆரம்பிக்கும் பிரதான வைபவம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (06) காலை சுகாதார அமைச்சில் நடைபெற்றது. 

"விபத்துக்களைக் குறைப்பதற்காக தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்" - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

நீர்த்தேக்கங்களில் போதுமான அளவிற்கு நீர் காணப்படுகிறது - நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பொறியியளாலர் கலாநிதி கித்சிரி வெலிகேபாலகே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் சுமார் 50 சதவீதம் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது சிறு போகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நீர் சேகரிப்பு நிறைவடையும் என்றும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு ஓரளவிற்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அதன்படி, வரவிருக்கும் பெரும் போகம் அக்டோபர் மாத முதல் பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் மட்டத்தைப் பராமரித்துக்கொண்டே அடுத்த பருவத்திற்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

 

 மேலும், நவம்பர் மாதத்தில் அதிக மழை பெய்தால், தற்போது விவசாயம் செய்யப்படும் நெல் வயல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பயிர்களைத் தாங்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கங்களைத் தவிர, குடிநீர் பெறப்படும் மற்ற நீர்த்தேக்கங்களிலும் போதுமான நீர் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீர்த்தேக்கங்களில் போதுமான அளவிற்கு நீர் காணப்படுகிறது - நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம்