All Stories

இலங்கையில் இருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி

சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அரைமச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின்(JICA) சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின்(JICA) சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

• தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் பிரஜைகளுக்கான சலுகைகளை அதிகளவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திரு. பீ.பீ. டர்னி பிரதீப் குமார அவர்கள்

கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திரு. பீ.பீ. டர்னி பிரதீப் குமார அவர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திரு. பீ.பீ. டர்னி பிரதீப் குமார அவர்கள்

திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார நியமிப்பு

திருகோணமலை மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு பதவிக்கு தற்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார நியமிப்பு

எமது நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எமது நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கல்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஒரு இணையத்தளம்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதுவராலயங்களின் ஊடாக தாமதம் இன்றி பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய டிஜிட்டல் வசதிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (06) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஒரு இணையத்தளம்

பதிவு செய்யாத வைத்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க  தயார்

இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவு செய்யாத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

பதிவு செய்யாத வைத்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க  தயார்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் தொடர்பான மதிப்பாய்வு

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ், பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்த எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் தொடர்பான மதிப்பாய்வு

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம் சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும் - இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

 

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும்

 

  • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்

 

                         - புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வில்  ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும்  அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று  பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை  இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.

இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த   அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

கத்தார் நாட்டின் தூதுவராக  - ஆர்.எஸ்.கான் அசாத்

ரஷ்ய தூதுவராக - திருமதி எஸ்.கே.  குணசேகர

குவைத் தூதுவராக - எல்.பி.ரத்நாயக்க

எகிப்திய தூதுவராக - ஏ.எஸ்.கே.செனவிரத்ன

நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக - டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

07.01.2025

 

 

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்  சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும்  -	இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்

மருந்து கடத்தல்காரர்களின் நலன்களுக்காக அரசாங்கம் செயல்படாது சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

உலகில் அதிக இலாபம் ஈட்டும் வியாபாரமாக தற்காலத்தில் மோசடியாக மாறியுள்ள மருந்துத் துறையின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றும் அவற்றை சரியாக திருத்துவதற்கு முன்னிற்கும் சகல ஊழியர்களையும் ஊக்குவிப்பதற்கு, அவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் துணை நிற்கும் என்றும் கடத்தல்காரர்கள் அல்லது அந்த குழுவின் இலக்குகளுக்காக அமைச்சு அல்லது அரசாங்க சேவைகள் மேற்கொள்ளப்படாது என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA)   விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

 

  • இதன் போது தேசிய ஔடதங்கள்  ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய ஆனந்த விஜேவிக்ரம உட்பட அதிகாரிகளுடன் அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள், நிர்வாகத்துறை, ஊழியர்களின் சிக்கல்கள், மருந்து விலை ஒழுங்குபடுத்தல், மருந்துகளின் பதிவு, புதிய விண்ணப்பங்கள் கோரல், போன்ற துறைகள் தொடர்பாக அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

 

தரம், தன்மை, மருந்து தொடர்பான சகல செயற்பாடுகளிலும் பிரச்சனைகள் ஏற்பட்டால் ஒரு அணியாக சகலரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்புடன் கூடியதாக செயற்படுதல் முக்கியமானது என வலியுறுத்தினார். 

  

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நாட்டில் காணப்படும் மருந்து உற்பத்திகளின் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறன் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரச் சான்றிதழ் ஊடாக பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பை மேற்கொள்ளுதல் மற்றும் முன்னேற்றுவதற்காக முன்னணி செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், மருந்துகள், சுகாதாரப் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் அழகுக்கலை பொருட்கள் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறனை சான்றுப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தல், கண்காணித்தல் மற்றும் சாட்சி அடிப்படையிலான தீர்மானங்களை வழங்கும் நிறுவனமாகும்.

மருந்து கடத்தல்காரர்களின் நலன்களுக்காக அரசாங்கம்  செயல்படாது  சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]