All Stories

இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இந்த நிகழ்வு இணைந்திருப்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான நமது தலைவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பந்த் (Sanjaya Panth), சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்களான பீட்டர் ப்ரூவர் (Peter Breuer), ஈவான் பபாஜியோரிஜியோ (Evan Papageorgiou) ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-07

 

 

 

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

கோசல நுவன் ஜயவீர அவர்களின் மறைவையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை தேர்தல் தொகுதியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர அவர்களின் மறைவையடுத்து அரசியலமைப்பின், 66(அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

கோசல நுவன் ஜயவீர அவர்களின் மறைவையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

“குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
 
2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.
“குடிசன  மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

நாட்டின் பொது மருத்துவமனை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கை அரசாங்கத்தின் மருத்துவமனை கட்டமைப்பினை டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு தரமான, வினைத்திறனான சேவைகளை வழங்குவதும், நோய்வாய்ப்பட்ட பொதுமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு, மற்றும் வசதியான இடமாக மாற்றுவதும் சுகாதார அமைச்சகம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டின் பொது மருத்துவமனை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

21 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் பகுதியளவு சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்பட்டன

பதவிய பிரதேச செயலகப் பிரிவின் போகஹவெவ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொலொங்கொல்ல குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை 9 வது கஜபா படையணி படையினர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி வெற்றிகரமாக சீரமைத்தனர்.

21 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் பகுதியளவு சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்பட்டன

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை கலாநிதி அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரசாகம் அவர்களை 2025 மார்ச் 30 அன்று மன்னார் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு மியான்மருக்கு சென்றது

சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு மியான்மருக்கு சென்றது

இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணக் குழு மியான்மாரை வந்தடைந்தது

மியன்மாருக்கான இலங்கையின் சிறப்பு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு, சனிக்கிழமை (ஏப்ரல் 05) யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணக் குழு மியான்மாரை வந்தடைந்தது

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகமட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  300/400 கிராம் Frozen Fish பொதிகள்.

கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம்  04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நீர்கொழும்பு கம்பஹா பிரதேச முகாமையாளர் மற்றும் ஊழியர்களினால் வழிநடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் விஷேட குலுக்கல் சீட்டிழுப்பும் நடத்தப்பட்டு பெறுமதியான பரிசுகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  300/400 கிராம் Frozen Fish பொதிகள்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]