காங்கசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

காங்கசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
  • :
முப்பது ஆண்டுகால யுத்தத்தால் அழிக்கப்பட்ட காங்கசந்துறை ரயில் நிலையம் அதன் முன்னைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்க போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து செயல்பட்டு வருகின்றன. 
அதன்படி, நேற்று (08) காங்கசந்துறை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த ரயில் பாதையை, காங்கசந்துறையில் கட்டப்பட்டு வரும் தொழில்துறை வலயம்  வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 
இது பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக வசதிகளை வழங்கும் என்றும், ரயில் பாதையை புனரமைப்பதன் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ரயில் நிலையத்தில் இதுவரை பொருட்களைப் பெறுவதற்கும் சேமிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை என்றும் அவர் கூறினார். நேற்று தொடங்கிய சரக்கு போக்குவரத்து சேவைகள் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியையும் இலாபகரமான சேவையையும் வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]