பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
  • :

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளைச் சேர்ப்பதன் மூலம் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம்  09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜூன் 09 ஆம் திகதி, காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை, 09 ரயில்கள் அனுராதபுரம் வரை பயணிக்கும். அவற்றில் இரண்டு காலை 5.25 மணி மற்றும் காலை 8.55 மணிக்கு பெலியத்தவிலிருந்து புறப்படும். மீதமுள்ள ரயில்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தை சென்றடையும்.

ஜூன் 10 ஆம் திகதி, பெலியத்தவிலிருந்து ஒரு ரயில் மற்றும் கொழும்பு கோட்டையிலிருந்து 06 ரயில்கள் அனுராதபுரத்திற்கு பயணிக்க உள்ளன. அன்று பெலியத்தவிலிருந்து வரும் ரயில் காலை 8.55 மணிக்கு புறப்படும்.

ஜூன் 11 ஆம் திகதி காலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொழும்பிலிருந்து 06 ரயில்கள் புறப்படும், அதே நேரத்தில் மற்றொரு ரயில் அன்று காலை 8.55 மணிக்கு பெலியத்தவிலிருந்து புறப்படும்.

அனுராதபுரத்திற்கு யாத்திரைக்காக செல்லும் பயணிகள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கும் விசேட ரயில் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை போசன் யாத்திரை மொபைல் செயலியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]