2025 மே மாதம் 20 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மே மாதம் 20 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
தென்மேற்கு பருவ காலநிலை நிலை பெற்று வருகிறது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
வடமேல், வடமத்தி, வடக்கு, மத்திய மற்றும் தென்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம்.
இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் அபாயங்களை குறைப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.