இலங்கை தொழில்நுட்ப சேவையின் கீழ் 133 தொழினுட்ப உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்
அபிவிருத்தி ஒதுக்கீடுகளை முறையாக நிர்வகிப்பதற்கு மனித வளத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன
தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்பது பணித்தளத்தையும் அலுவலகத்தையும் இணைக்கும் பாலமாகும் – இராஜாங்க அமைச்சர் ருவன் செனரத்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்கியுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். மேலும், இந்த ஒதுக்கீடுகளை முறைமையாகவும் திறம்படவும் பயன்படுத்துவதற்கு பொறியியல், திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மனித வளம் இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை தொழில்நுட்ப சேவையின் (தரம் III) தொழினுட்ப உத்தியோகத்தர் பதவிகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 133 பேருக்காக கொழும்பு 05 இல் உள்ள "நிலமெதுர" கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


