இலங்கையில் உள்ள கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ அவர்கள் 2025 பெப்ரவரி 19, அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
அவரை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
இவ் விஜயத்தின் போது இராணுவத் தலைமையிலான சமூக ஈடுபாட்டு முயற்சிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக தளபதி விரிவான விளக்கத்தை வழங்கினார். கனடா எல்லை சேவைகள் நிறுவன அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக் கட்டுப்பாடு, குடிவரவு அமுலாக்கம் மற்றும் சுங்க சேவைகள் தொடர்பான கலந்துரையாடல்களை திருமதி குபோ அவர்கள் முன்னெடுத்தார்.
நினைவுப் பரிசுப் பரிமாற்றத்துடன் விஜயம் நிறைவடைந்த்து. மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் திருமதி குபோ அவர்கள் தனது கருத்துகளை கையெழுத்திட்டார்.