பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு - அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்

  • :
பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை  வெளியிட்டுள்ளது. 
 
வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டியதாக காணப்படும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
 
போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும்  ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
 
 
அவ்வாறே வயோதிபர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வெள்ளை அல்லது இள நிறங்களில் மற்றும் இலகுவான ஆடைகளை  அணிந்து கொள்ளுமாறும் கனரக வேலைகளில் ஈடுபடுவதில் இருந்து முடிந்தவரை கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல் பின்வருமாறு;
 
 
 
அதிக வெப்பநிலை
 

காலநிலை தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கூறும் அறிவித்தல் 

 
 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பாக அனர்த்த அபாய முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்காக செல்லுபடியாக விதத்தில், 2025 பெப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டது 
 
 
 வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, சப்ரகமோ மாகாணங்களில் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்காக 
 
அவதானமாக இருக்கவும்! 
 
வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, சப்ரகமோ மாகாணங்களில் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில வெப்பமான குறியீடு, அது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "கவனம் செலுத்தப்பட வேண்டியதாக" இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]