ஆரம்ப சிறுபராய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் ஜூலை 14-20

ஆரம்ப சிறுபராய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் ஜூலை 14-20
  • :

'மலரும் சிறுவர் உலகிற்கு - அழகான குடும்பம் ஒரு சூரியக் கதிர்' எனும் கருப்பொருளின் கீழ், ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உடல், உள-சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சியைக் கொண்ட ஒரு இலங்கை ஆரம்ப சிறுபராய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வாரத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு தழுவிய ரீதியில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இன்று (16) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கான விசேட நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Related Articles