கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 10000 லீற்றர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் கொடவேஹேர, திகன்னேவ கிராமத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.