பலாங்கொடை நகரில் சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயம்

பலாங்கொடை நகரில் சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயம்
  • :

பலாங்கொடை நகரின் மத்தியில் அமைந்துள்ள அதிக மதிப்புள்ள இரண்டு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பை சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பிகா ஜானகி ராஜரத்ன தெரிpவித்துள்ளார்.

அந்த நிலப்பரப்பு உள்ளடங்கிய பிரதேச கண்காணிப்பு விஜயத்தின்போnது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பலாங்கொடை தொரவல கங்கையை அண்மித்து மிகவும் ரம்மியமாக அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில், உணவு, சுகாதார வசதிகள், வாகன தரிப்பிட வசதிகள், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

Related Articles