ஜூன் 5 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்த இந்த ஆண்டு தேசிய கொண்டாட்டம், கேகாலை நிதஹஸ் மாவத்தையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று (29) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை தேசிய சுற்றுச்சூழல் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.
அதன்படி, மே மாதம் 30 ஆம் திகதி பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 30 அரச நிறுவனங்களுடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும், அத்துடன், மே மாதம் 31 ஆம் திகதி நிதஹஸ் மாவத்தையில் இலவச வாகன உமிழ்வு சோதனை மற்றும் விழிப்புணர்வு திட்டமும் நடாத்தப்பட உள்ளது.