அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அசி திசி - பியவர' கேகாலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் பட்டறை நேற்று (05) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.கே.ஜே. பண்டார மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர் எச்.எம்.ஜே.எம். ஹேரத் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.