திருகோணமலை நகரத்தினுடைய கடற்கரையை கிளீன் கடற்கரை நகரமாக (Clean Beach City) உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடல்

திருகோணமலை நகரத்தினுடைய கடற்கரையை கிளீன் கடற்கரை நகரமாக (Clean Beach City) உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடல்
  • :

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரத்தினுடைய கடற்கரையை கிளீன் கடற்கரை நகரமாக (Clean Beach City) உருவாக்குவது தொடர்பாக கிளீன் ஸ்ரீலங்கா பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் நேற்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி அவர்களினால் திருகோணமலை நகரத்தினுடைய கடற்கரையை கிளீன் கடற்கரை நகரமாக உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல், திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளர் யூ. சிவராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Articles