வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 11.05.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், காலநிலை மாற்றம் காரணமாக மழை எப்போது கிடைக்கும் என்பதை எதிர்வுகூற முடியாத நிலைமை இருக்கின்றது. எனவே திட்டங்களை எவ்வளவு விரைவாக செய்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடிக்கவேண்டும். இந்தமுறை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய வகையில் அதைச் செலவு செய்யவேண்டும். அடையாளப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை உரிய காலத்தில் செயற்படுத்தி முடிக்கவேண்டும். அடுத்த மாதத்திலிருந்து நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் அதிகளவாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீச்பாசனத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றம், இடர்பாடுகள் தொடர்பில் ஆளுநரால் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.