பார்வையிடச் செல்வதைத் தவிர்க்கவும்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, பாதுகாப்பற்ற இடங்களை பார்வையிடச் செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிசார் எச்சரித்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டைப் பாதித்த திடீர் பாதகமான வானிலை காரணமாக சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களை உடனடியாக மறுசீரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
அத்தகைய சேதமடைந்த இடங்களைப் பார்வையிட இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிக அளவில் வருவது கவனிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வருகைகள் மிகவும் பாதுகாப்பற்றவை என்பதால், சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற இடங்களைப் பார்வையிட செல்ல வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


