2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று (17.03.2025) நடைபெற்ற அமைச்சரவையில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
• 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு
• காலபோகக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படுகின்ற வயல் காணிகளில் மேற்கொள்ளப்படும் வேறு போகப் பயிர்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு நிதி மானியத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.