clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் யென் நிதியுதவி

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் யென் நிதியுதவி
  • :

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான உதவி பெரிதும் பங்களித்துள்ளது. 

இதன் கீழ், ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் கழிவுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் 28 அதிநவீன கம்பெக்டர் வாகனங்களை வாங்குவதற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த மானியம் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றலுக்கான முயற்சிகளை கணிசமாக மேம்படுத்துவதோடு, நிலையான நடைமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய அளவிலான உறுதிப்பாட்டை உறுதி செய்யும், அரசாங்கத்தின் Clean Srilanka திட்டத்தின் இலட்சியத்திற்கு ஏற்ப, நாட்டின் பௌதீக சூழலை தூய்மையானதாக மாற்றும்.

இந்த நிதி உதவியை வழங்கியதற்காக ஜப்பான் அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, இலங்கையின் தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]