எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக விழா” பிரதமரின் தலைமையில் ஆரம்பம்.

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக விழா” பிரதமரின் தலைமையில் ஆரம்பம்.
  • :

புத்தசாசன,  மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் செயற்படும் ரவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த “எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு” ‘டவர் நாடக விழா’ டவர் மண்டப மன்ற தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் மருதானை டவர் மற்றும் எல்பின்ஸ்டன் நாடக மன்றத்தை மையமாக கொண்டு பெப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகியது.

நாடகத்தை ரசிப்பதற்கு தரமான பார்வையாளர்களை உருவாக்குதல் நாடகக் கலைஞர்களின் வருமானத்தை அதிகரித்தல், நாடகத்தை ஊக்குவித்தல் மற்றும் நாடகம் தொடர்பாக பரந்த சமூக கலந்துரையாடல்களை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் முறை நாடக விழா தொடர்து 10 நாட்கள் இடம் பெறும். இங்கு 14 முழு நீள நாடகங்கள், 12 குறு நாடகங்கள் மற்றும் 08 சிறுவர் நாடகங்கள் என மொத்தமாக 34 நாடகங்கள் 68 முறை மேடையேற்றப்பட உள்ளன.

நாடக விழா நடைபெறும் 10 நாட்களும் ரவர் கலைஞர்கள் இருவர் வீதம் 20 பேருக்கு வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படுகின்ற ‘ரவர்’ பாராட்டு விருது மற்றும் பண பரிசில்கள் வழங்கப்படும். இதில் முதல் விருது சிரேஷ்ட கலைஞர் விஜேரத்ன வரகாகொட அவர்களிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]