ஜனாதிபதி இன்று யாழ் விஜயம் - பல நிகழ்வுகளில் பங்கேற்ப்பு

ஜனாதிபதி இன்று யாழ் விஜயம் - பல நிகழ்வுகளில் பங்கேற்ப்பு
  • :

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.

இன்று முற்பகல் 10:00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்குபற்றினார்.

அதனையடுத்து இன்று (31) பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]