கெமுனு ஹேவா படையணி படையினரால் மீட்பு நடவடிக்கை

கெமுனு ஹேவா படையணி படையினரால் மீட்பு நடவடிக்கை
  • :

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை கெமுனு ஹேவா படையணியின் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் 2025 மார்ச் 1 அன்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த நன்பெரியல் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 75 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தது.

கெமுனு ஹேவா படையணி படையினரின் விரைவான நடவடிக்கையின் விளைவாக, ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் மேலும் உயருவதற்கு முன்பு பொதுமக்களை மீட்க முடிந்தது.

இந்த மீட்பு நடவடிக்கையில் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் பங்கேற்றனர்.

Related Articles