மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையினால் குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடராக அமைச்சு நெருங்கிய மேற்பார்வையை செய்வதுடன், உரிய நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு குறித்த நாடுகளின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலுகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இந்நிலையை கருத்திற்கொண்டு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 24 மணி நேரமும் செயற்படும் செயற்பாட்டு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அவசர நிலையின்போது கீழ்உள்ள தொலைபேசி இலக்கங்களூடாக தகவல்களை விசாரிக்க முடியும் என அறியத்தருகின்றோம்.
WhatsApp/Imo +94719802822
Hot line 1989
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு


