பரிசுத்தப் பாப்பரசருக்கு இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு

பரிசுத்தப் பாப்பரசருக்கு இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு
  • :

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அண்மையில் (02) வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட் தந்தையை (Msgr. Mihăiță Blaj) சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார்.

Related Articles