போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
  • :
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, "நாடே ஒன்றாக" எனும் தேசியப் பணித்திட்டத்திற்கு இணைவாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் ஆரம்பமாக, மார்ச் 01 ஆம் திகதி முதல் 'போதைப்பொருள் தடுப்பு வாரம்' நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 இவ்வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நாடு முழுவதும் விழிப்புணர்வுத் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகம் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை இணைந்து ஏற்பாடு செய்த விசேட நிகழ்ச்சியொன்று நேற்று (04) ராஜகிரிய ஹேவாவிதாரண வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இங்கு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிவு, புரிதல் மற்றும் மனப்பாங்கு வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், கல்விச் செயற்பாடுகளுடன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
 
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர், "கல்வி என்பது வெறும் புத்தகங்களைப் பாடமாக்கித் தேர்வுகளில் சித்தியடைவது மட்டுமல்ல; நாம் பிறக்கும்போது கொண்டு வரும் வெறுமையான மனதிற்குப் பின்னரே பல்வேறு தகவல்கள் உள்வாங்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், "கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுதல் போன்ற புலன்களின் ஊடாகப் பெறும் தகவல்களின் அடிப்படையிலேயே நாம் தீர்மானங்களை எடுக்கப் பழகுகிறோம்.
போதைப்பொருள் போன்ற அழிவுகரமான விடயங்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் சிக்கினால் அதிலிருந்து மீள்வது கடினம். பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால், 'ஆம்' என்று சொல்வது போல 'இல்லை' அல்லது 'முடியாது' என்று சொல்லத் தேவையான ஆத்ம பலத்தை (Self-strength) பாடசாலைக் காலத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்" என விளக்கமளித்தார்.
 
இதன்போது போதைப்பொருள் ஆபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இவ்வேலைத்திட்டத்தின் விரிவுரைகளுக்கான பிரதான வளப்பங்களிப்பை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை வழங்கியிருந்ததுடன், அதன் கல்வி மற்றும் தகவல் அதிகாரி மஹேஷி மதுசங்கா மற்றும் உதவி ஆலோசனை அதிகாரி உதேஷிகா லக்மாலி ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலாளர் கசுன் ஏபா செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 
மேலும், அரச ஊழியர்களுக்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த "ஆரோக்கியா" நடமாடும் மருத்துவ முகாம் இன்று கோட்டே பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பிற்கான "நாடே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டம் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமானது. இதற்கு இணையாக, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த, மாணவர்களின் திறன்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று (2026.03.04) இராஜகிரிய ஹேவாவித்தாரண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
போதைப்பொருளுக்கு எதிரான மனப்பாங்கை மேம்படுத்துதல், விஞ்ஞான ரீதியான அறிவை வழங்குதல் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுத்தல் ஆகியன இதன்போது நோக்கங்களாகக் காணப்பட்டன.
இந்நிகழ்விற்கான வளவாளர்களாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் கல்வி மற்றும் தகவல் அதிகாரி மஹேஷி மதுசங்கா மற்றும் உதவி ஆலோசனை அதிகாரி உதேஷிகா லக்மாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலாளர் கசுன் ஏப்பா செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles