2024(2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 3527 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2025.03.11 நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை, குறித்த பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..