உலகிற்கு ஏற்ற தரமான கல்வியை வழங்குவதற்கு கல்வி சீர்திருத்த்தின் மூலம் சாத்தியமாகும். 11 அல்லது 13 ஆண்டுகள் கல்வி கற்ற பின்னர், ஒருவர் தொழிலொன்றைச் செய்யவோ அல்லது பட்டப்படிப்பைத் தொடரவோ அல்லது அந்த இரண்டையும் செய்யவோ கூடிய வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அவ்வாறே பாரபட்சம் இல்லாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரத்துடன், அபிவிருத்திக்காக பாடசாலைகளைத் தெரிவுசெய்ய வேண்டும்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜூலை 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.


