மனித - யானை மோதல் குறித்து நிரந்தர தீர்வு காண்பதற்கான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, உரிய தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (08) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இது, மனித - யானை மோதல் குறித்து விவாதித்து முடிவுகளை எடுப்பதற்கான ஒரு குழுவாக செயல்படுத்தப்படும்.
வன பாதுகாப்பு, வனவிலங்குகள் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மாகாண சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் மனித-யானை மோதலைத் தடுப்பதற்குத் தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியைத் தயாரிப்பதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.


