சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
  • :

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் (100 மணித்தியாலயம்) சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வைத்தியசாலையின் கேற்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எப்.பி.மதன் அவர்களும் கௌரவ அதிதியாக 232 வது ராணுவ காலாட்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர்.சீ.கருணாரத்ன அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.ஐ.பாரூக், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜெமீல், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஆர்.ஜுனைத், தி/கந்/சோமபுர மகா வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.எம்.பிரியந்த, ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் மற்றும் பாடநெறியின் இணைப்பாளர் வை.வாசுகி உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் 58 சுகாதார உதவியாளர்கள் இப்பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

 

Related Articles