கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(29.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இரணைமடுகுள கிழக்கு கரையில் அமையவுள்ள குறித்த மண்டபத்திற்கான அடிக்கல் முற்பகல் 9.14 மணி தொடக்கம் 10.30மணி வரையுள்ள சுபவேளையில் நாட்டி வைக்கப்பட்டது.


