தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன் பொற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில் நேற்று (10.09.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறு தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் வங்கிகளில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடன் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டன.


