2025.05.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயப்படுத்தல் தேசிய அணுகலுக்கு சமர்ப்பிக்கப்படும் கருத்திட்ட யோசனைகளை மதிப்பீடு செய்வதற்கான தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றை நியமித்தல்
இலங்கையில் முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு தற்போது இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இயங்கி வருகின்றது. ஆயினும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயப்படுத்தலுக்கு ஏற்புடைய கருத்திட்டங்களை அடையாளங்காணல், அவற்றின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஆற்றல் வளங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் வலுவூட்டுவதற்காக சரியான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி முதலீட்டாளர்களுக்கு நேயம்மிக்க பொறிமுறையொன்றை முறையான வகையில் தாபிக்கப்படாமையைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் 'ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி வணிகமயப்படுத்தல் தேசிய அணுகல் (NIRDC)' தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வுகளை நிறைவு செய்துள்ள அல்லது அண்மையில் ஆய்வுகளை நிறைவு செய்வதற்குள்ள கருத்திட்டங்கள், பெறுமதி சேர் விற்பனை செய்யக்கூடிய உற்பத்திகள் அல்லது சேவைகளாக சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்காக முன்வருகின்ற முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்குவது, குறித்த அணுகலை நிறுவுவதே முக்கிய நோக்கமாகும். அதற்கமைய, ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி வணிகமயப்படுத்தல் தேசிய அணுகலுக்கு வணிகமயப்படுத்தலுக்கு சமர்ப்பிக்கப்படும் கருத்திட்ட யோசனைகளை மதிப்பீடு செய்து பொருத்தமான முதலீட்டாளர்களை தொடர்புபடுத்துவதற்கு தொழிநுட்ப, கல்வி, விஞ்ஞானம், சுகாதாரம், சுற்றாடல், உணவு மற்றும் நிலைபேற்றுத்தன்மை, சமூக அபிவிருத்தி, நல்லிருப்பு மற்றும் ஏனைய துறைகளில் நிபுணத்துவ அறிவுகொண்ட நிபுணர்களுடன் கூடிய தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
02. இலங்கையின் டிஜிட்டல் அபிவிருத்தியை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவன ரீதியான கட்டமைப்பொன்றை நிறுவுதல்
2025.01.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போது நடைமுறையிலுள்ள இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மை நிறுவனம் ((ICTA) இரத்துச் செய்து டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் அபிவிருத்தியை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவன ரீதியான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக, இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தற்போது காணப்படுகின்ற டிஜிட்டல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துகின்ற அனுபவங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய டிஜிட்டல் மூலோபாயங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக நிரந்தமாகவும் சிறப்பாகவும் வரையறைக்கப்பட்ட நிறுவன ரீதியான கட்டமைப்பொன்று இருக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள டிஜிட்டல் நிலையுருமாற்றக் கருத்திட்டங்களை தடைகளின்றி அமுல்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான அதிகாரங்களுடன் சுயாதீன நிறுவனமாக '“GovTech (Pvt) Limited' பெயரிலான அரசுக்குச் சொந்தமான கம்பனியொன்றை நிறுவுவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியின் பங்குரிமைகளை விடுவித்தல்
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுலாஃஉபசரிப்பு துறையில் முதலீடு செய்வதற்காக கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனி நிறுவப்பட்டுள்ளது. குறித்த கம்பனியின் முதலீடாக அமைந்துள்ள 'கிறான்ட் ஹயிட், கொழும்பு' கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சினோலங்கா ஹொட்டல் அன்ட் ஸ்பா (தனியார்) கம்பனி தாபிக்கப்பட்டுள்ளது. 'அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம்' கீழ் கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியின் பங்குரிமைகளை விடுவிப்பதற்காகவும், குறித்த பணிகளுக்கான பரிவர்த்தனை ஆலோசகராக இந்தியாவின் டெலொயிட் டச் ஹமத்சு எல்எல்பீ கம்பனியைத் தெரிவு செய்வதற்காகவும், அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனாலும், அதற்கமைய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 'கிறான்ட் ஹயிட், கொழும்பு' கருத்திட்டத்தின் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (கிட்டத்தட்ட 36 பில்லியன் ரூபாய்கள்) தேவையென தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலதிகமாக தேவையான நிதி குறித்த கம்பனியின் பங்குதாரர்கள் அல்லது கடன் நிதியிடல் மூலமாகவோ பெற்றுக்கொள்வதற்குள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கம்பனியின் பங்குகளை விற்பனை செய்யும் செயன்முறை மூலம் தேவையான நிதியைப் பெற்றுக்கொண்டு கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்து வணிக ரீதியான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான மாற்றுவழியாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியின் பங்குரிமைகளை விடுவிக்கும் செயன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அதற்காக தொடர்ந்தும் பரிவர்த்தனை ஆலோசகராக இந்தியாவின் டெலொயிட் டச் ஹமத்சு எல்எல்பீ கம்பனியின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காகவும், நிதி, திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 'கடலோர இராப் பொழுது : உறங்காத கொழும்பு' கருத்திட்டம்
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 'கடலோர இராப் பொழுது : உறங்காத கொழும்பு' (Marine Nights: Awakening Colombo) தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலிமுகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. விசேட பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவத்திற்கான பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை நிறுவுதல்
பண்ணைகள் அல்லது விவசாய உற்பத்திகளின் விற்பனை, கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகத்திற்குத் தேவையான சந்தை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக 18 விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 14 பொருளாதார நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றன. குறித்த விசேட பொருளாதார நிலையங்களின் முகாமைத்துவமானது, 2006.01.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அந்தந்த மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்ஃமாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தகக் கம்பனிகளிலிலிருந்து உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படும் உறுப்பினர்களுடன் கூடிய முகாமைத்துவப் பொறுப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விசேட பொருளாதார நிலையங்களில் வர்த்தக நடவடிக்கைகள் வெற்றிகரமாகவும் நிலைபேறானதாகவும் மேற்கொள்வதற்காக மத்திய, சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற பொறுப்புக் கூறலுடன் கூடிய நிறுவனமொன்றைத் தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, விசேட பொருளாதார நிலையங்களை அபிவிருத்தி செய்தல், விரிவாக்கம் செய்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்காக பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை நிறுவுவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.
06. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுதல்
2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட புதிய அரசின் கொள்கைச் சட்டகத்தில் 'பாதுகாப்பான சிறுவர் உலகம் - ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி' எனும் கொள்கை ரீதியான கடப்பாட்டின் பிரதான கோட்பாடாக அமைகின்ற பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு விதமாக தலையிடுகின்ற பங்காளர்கள் சிலர் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நீதி மற்றும்ரசபையால் 24 மணிநேர முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்கியுள்ளது. ஆயினும், முறையான வகையில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பங்களும் அதிகளவில் கா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, மற்றும் இலங்கை பொலிஸ் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்றது. பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித வன்முறைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அதிகாணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரிதமாக தலையிட்டு செயற்படுவதற்கு இயலுமாகும் வகையில் கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :
• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய தேசியமட்டக் குழுவொன்றை நியமித்தல்
• பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற உடலியல் ரீதியான தண்டனைகளை இல்லாதொழிப்பதற்கு இயலுமாகும் வகையில் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் வழக்குக் கோவையை துரிதமாக திருத்தம் செய்தல்
• பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் பற்றி அறிக்கையிடும் போது பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாவதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உட்சேர்த்து, தற்போது வரைவாக்கம் செய்யப்படுகின்ற ஊடக ஒழுக்கநெறிக் கோவையை துரிதமாக வெளியிடல்
• பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தனித்துவ அடையாளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக செய்தித் தொடர்பாடலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக குற்றத்தால் பலியானவர்கள் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உடனடி தலையீடுகளைப் பெற்றுக் கொள்ளல்
07. மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 – கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல் கட்ட நிதி வசதிகளின் கீழ் 02 கட்டங்களுடன் கூடிய மகாவலி நீர்ப்பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்ட கட்டம் - 01 இனை நடைமுறைப்படுத்துவதற்காக 2015.04.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், வேலை ஒப்பந்தத்தின் பக்கேஜ் இன் மதிப்பிடப்பட்ட அளவுகள் மற்றும் செலவுகளை விஞ்சிச் செல்லல், நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் குறித்த வேலைத்திட்டத்தை திட்டமிட்டவாறு நிறைவு செய்வதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், இவ்வேலைத்திட்டத்தின் எஞ்சிய பகுதி முன்னுரிமை அடிப்படையில் பல கட்டங்களின் கீழ் மீள்கட்டமைத்து நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, வடமத்திய மாகாண மஹஎல நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் வடமத்திய மாகாண மஹஎலவுடன் இணைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு மேம்படுத்தப்பட்ட விநியோக நீர்க் கட்டமைப்புக்களுடன் கூடிய வணிக விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நிறுவுதல் போன்ற செயற்பாடுகள் உள்ளிட்ட மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 இனை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கட்டத்தின் கீழ், குருளுவாவி, மானங்கட்டிய, ஏறுவாவி, மஹகனதராவ, நாச்சதூவ, நுவரவாவி மற்றும் திசாவாவி போன்ற பெருநீர்ப்பாசனக் கட்டமைப்புக்களில் பயிர்ச்செய்கை வினைத்திறனை அதிகரித்தல், வடமத்திய மாகாண குடிநீர்த் தேவைக்கான 40 மில்லியன் கனமீற்றர் நீரை ஆண்டுதோறும் பெற்றுக் கொள்ளல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார விருத்தி போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இணை நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. அரச உரக்கம்பனி லிமிட்டட் மூலம் 15,000 மெற்றிக்தொன் யூரியா உரப் பெறுகை
அரச உரக்கம்பனி லிமிட்டட் மூலம் தனியார் துறையின் கம்பனிகள் மற்றும் போட்டித்தன்மையுடன் 2023ஃ24 பெரும்போகம் தொடக்கம் உர இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 2023.07.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சிய போகங்களுக்கும் திறந்த சந்தையில் நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காக போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடித்து, 15,000 மெற்றிக்தொன் யூரியாவை அரச உரக்கம்பனி லிமிட்டட் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. பால் உற்பத்தியாளர்களை முறையாக ஒன்றுசேர்த்து வலுவூட்டுவதன் மூலம் அவர்களுடைய உற்பத்திகளின் உற்பத்தித்திற்னை அதிகரித்தல் மற்றும் சேர்பெறுமதியை மேம்படுத்தல் கருத்திட்டம்
உலக வங்கியின் நிதியிடல் மூலம் உள்ளடக்கப்பட்ட ஒருங்கிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி, விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் 'பால் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து சேர்பெறுமதியை மேம்படுத்தல்' கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது. பால் உற்பத்திக்காக ஆற்றல்வளங்கள் காணப்படுகின்ற அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், மாத்தளை, கண்டி, நுவரெலியா, கம்ஹா, அம்பாறை, பதுளை, காலி மற்றும் அம்பாந்தோட்டை போன்ற 12 மாவட்டங்களில் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் பால் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து சேர்பெறுமதியை மேம்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 2025.09.01 தொடக்கம் 2025.12.31 வரையான காலப்பகுதியில் மெர்பன் வகை மசகு எண்ணெய்க் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகால பெறுகையை வழங்கல்
2025.09.01 தொடக்கம் 2025.12.31 வரையான காலப்பகுதியில் மெர்பன் வகை மசகு எண்ணெய்க் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக, 07 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் பிரகாரம் சிங்கப்பூரின் டீடீ நுநெசபல யுளயை Pவந.டுவன இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்தல்.
பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 'பரஸ்பர மதிப்பீடு' எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது. இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
12. 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் மானியங்களாக வழங்கப்படும் பொருட்கள் மிகையாவதன் பாதிப்பிலிருந்து உள்நாட்டுக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாளர்களை பாதுகாப்பதற்காக 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய '2025 மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வை ஒழுங்குவிதிகளை விதித்தல் தொடர்பான நுண்ணாய்வை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பம்' மற்றும் '2025 விலை வாக்குறுதி ஒழுங்குவிதிகளுக்கான நடைமுறைகள்' தொடர்பான ஒழுங்குவிதிகளை பிரகடனம் செய்வதற்கு 2025.03.03 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய மேற்குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தயாரிக்கப்பட்ட 2025-03-27 திகதிய 2429ஃ32 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள '2025 மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வை ஒழுங்குவிதிகளை விதித்தல் தொடர்பான நுண்ணாய்வை ஆரம்பிக்க கோரும் ஒழுங்குவிதிகளை' அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 2024 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்
பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துவதற்காக 2024 ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டு, 2025-03-28 திகதிய 2429ஃ51 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் மூலம் அவ்வாறான வழக்கு தீர்ப்புகளை அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய வெளிநாடுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகரிப்பதற்காக சமர்ப்பித்தல்.
2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இலங்கை ஊக்கப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான முகவராண்மை நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், உலக ஊக்கப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான முகவராண்மை நிறுவனத்தின் நியமங்களின் கீழ் இயங்குகிறது. மேற்குறித்த நிறுவனத்தின் கட்டாய சர்வதேச நியமங்களான தடை செய்யப்பட்ட பதார்த்தங்களின் பட்டியலை தொடர்புடைய சமவாயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் தமது நாடுகளில் இற்றைப்படுத்தி அமுல்படுத்த வேண்டும். அதற்கமைய, 2025 ஆண்டுக்கு உரியதாக விளையாட்டு வீரர்கள், குதிரைகள் மற்றும் குதிரைப் பந்தய போட்டிகளுக்கான தடை செய்யப்பட்ட பதார்த்தங்களை வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டதும், 2025-04-03 திகதிய 2430ஃ24 இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க தடை செய்யப்பட்ட ஊக்கப் பதார்த்த (தடை செய்யப்பட்ட பட்டியல்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
15. விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமனம் செய்தல்
விவசாய பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றிய கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி.எதிரிமான்ன அம்மையார் 2025-05-18 திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய வெற்றிடமாக உள்ள விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் பணியாற்றும் இலங்கை விவசாய சேவையின் விசேட தர அலுவலர் திரு. டபிள்யூ.ஏ.ஆர்.ரி.விக்ரமாராச்சி அவர்களை உடனடியாக அமுலாகும் வகையில் நியமனம் செய்வதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
16. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துதல்.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
17. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்கான செயற்பாட்டுக் குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொபமிடுதல்.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்கான செயற்பாட்டுக் குழுவை நிறுவுதல் உகந்ததாக உள்ளது. அதன்மூலம் இருதரப்பு வர்த்தகத்தில் பயன்பாட்டுக்கு எடுக்கப்படாத சாத்தியங்களை திறந்து விடுதல், வர்த்தகம் சார்ந்த சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக வீச்செல்லையை அதிகரித்தல் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் குறிக்கோளாக உள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்ட வகையில் செயற்பாட்டுக் குழுவை நிறுவுவதற்காக மக்கள் சீனக் குடியரசின் வாணிப அமைச்சு மற்றும் இலங்கையின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
18. 2025-06-01 தொடக்கம் 2025-11-30 வரையான காலப்பகுதியில் 05 கப்பல் டீசல் (0.05 மூ ஆ.ளு) கொள்ளவை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
2025-06-01 தொடக்கம் 2025-11-30 வரையான காலப்பகுதியில் 05 கப்பல் டீசல் (0.05 மூ ஆ.ளு) கொள்ளவை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட வழங்குனர்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, 07 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட நிரந்தர பெறுகை குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் ஆஃள வுசயகபைரசய Pவந. டுவன. கம்பனிக்கு வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
19. கைத்தொழில்;, தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மக்கள் சீனக் குடியரசின் வாணிப அமைச்சு ஆகியவற்றுக் இடையிலான கைத்தொழில் வழங்கல் சங்கிலிகளின் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.
பொது அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்ற பரஸ்பர நன்மைகளை பெறும் குறிக்கோளுடன் கைத்தொழில்;, தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு, மற்றும் மக்கள் சீனக் குடியரசின் வாணிப அமைச்சு ஆகியவற்றுக் இடையிலான கைத்தொழில் வழங்கல் சங்கிலிகளின் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கைத்தொழில்;, தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு, மற்றும் மக்கள் சீனக் குடியரசின் வாணிப அமைச்சு ஆகியவற்றுக் இடையில் உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் இடுவதற்கு கைத்தொழில்;, தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
20. 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்தல்.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2025-02-09 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த அமைச்சரவை குறிப்பை கவனத்தில் எடுத்து, தற்போது இனங்காணப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இனங்காணப்படும் திருத்தங்களை உள்ளடக்கி மேற்குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் கௌரவ நீதியரசர் ஒருவரின் தலைமையில் தொடர்புடைய அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
21. வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகத்தை நிறுவுதல்.
இலங்கையின் அரச வருமானங்களை சேகரிக்கும் பொறிமுறையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கைச் சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று நிறுவனங்கள் முதன்மையான பொறுப்புக்களை வகிக்கின்றன. தற்போது மேற்குறித்த நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படாத நடவடிக்கை செயன்முறை நிலவுதல், இற்றைப்படுத்தப்படாத செயன்முறைகள் மற்றும் சட்ட கட்டமைப்புகள் காரணமாக ஏற்படும் வினைத்திறனின்மை, உரிய வகையில் வருமானங்கள் அறவிடப்படாமை, டிஜிற்றல் மயப்படுத்தலுக்கான போதுமானளவு ஆர்வம் இன்மை, கொள்கைகளை அமுல்படுத்தும் போது நிறுவனங்களுக்கிடையிலான போதுமானளவு ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் நேர்மை தொடர்பான பிரச்சினைகள் போன்ற சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை காணப்படுகிறது. 'சுபீட்சமான நாடு – அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேரண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் வழிமுறைகளின் கீழ் சர்வதேச கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் செயற்படுவதற்கான விசேட பிரிவை உள்ளடக்கிய வரி கொள்கையை திட்டமிடுதல் மற்றும் அமுல்படுத்துவதற்கான புதிய அலகை அறிமுகம் செய்ய முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போதுள்ள சவால்களை வெற்றி கொள்வதன் மூலம் அரச வருமான பொறிமுறையை பலப்படுத்தவதற்காக சர்வதேச உன்னதமான பிரயோக முறைகளுடன் இணங்கும் வகையில் 'வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம்' எனும் பெயரிலான விசேட பணியகத்தை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.