2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
* தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின்படி, உயர் தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும்.
* 2026 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும்.
* 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகளில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இப்பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும்.
* அதற்கமைய, 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய காலம் கிடைத்துள்ளமையினால், குறித்த பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை எழவில்லை.
செயலாளர்,
கல்வி, உயர்கல்வி மற்றும்
தொழிற்கல்வி அமைச்சு


