2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 29 நாட்களினுள் 175,661 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், 2026 ஜனவரி 01ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 732,316 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


