ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (15) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட அஸ்கிரி தரப்பின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரைச் சந்தித்து, சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.
சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


