சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக சமூக பங்குதாரர்களின் ஒத்துழைப்பினை மேம்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறி நேற்று (12) திருகோணமலை மாவட்ட பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சிநெறியானது திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பின் (PEaCE) நிதியனுசரனையுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலின் தன்மை மற்றும் தாக்கங்களைப் புரிந்து கொள்வது, சமூக பங்குதாரர்கள் தங்களுடைய பங்களிப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொள்வது, பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வழிகளை ஆராய்தல், துஷ்பிரயோகத்திற்கு எதிரான சட்டங்களை அறிதல், ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் திறன்களை வளர்த்தல் போன்றன இப்பயிற்சி நெறியின் முக்கிய நோக்கங்களாகும்.
PEaCE நிறுவனத்தின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பாளர் டி.எம். பிரதீப் தரங்க, நிகழ்ச்சி திட்ட அதிகாரி எஸ். கமலதாசன், நிகழ்ச்சி திட்ட அதிகாரி இ.பி. ரமேஷ் டில்ரூ,
நிகழ்ச்சி திட்ட அதிகாரி டி. சாமினி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதன்போது மாவட்ட செயலக அரசு சாரா நிறுவன ஒருங்கிணைப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பி.அத்தநாயக்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்,தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.