இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தக் சந்திப்பின் போது, நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகள், குறிப்பாக பேரிடர் மீட்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மீளமைப்பு திட்டங்கள் குறித்து கலாநிதி குணசேகர பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
குறிப்பாக இயற்கை பேரிடர்கள் மற்றும் சுகாதார அவசரநிலைகளின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் செஞ்சிலுவைச் சங்கத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை பிரதி அமைச்சர் பாராட்டினார். பேரிடர் தயார்நிலை மற்றும் மறுமொழி வழிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.