இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியை நடத்துகிறது

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியை நடத்துகிறது
  • :

ஜெனீவா பாதுகாப்பு கொள்கை மையம் (GCSP), இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் (MOD) இணைந்து, மே 14 அன்று கொழும்பில் உள்ள ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியைத் ஆரம்பித்தது. 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்த பாடநெறி, 2025 மே 14 முதல் 21 வரை நடைபெறும்.

பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்து, செனகல் (பிரான்சில்), ஜோர்டான், மங்கோலியா மற்றும் கென்யாவிலும், GCSP இன் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பாடநெறி நடைபெறும். சுவிட்சர்லாந்து பாதுகாப்பு அமைச்சினால் (DDPS) நிதியுதவியுடன் நடைபெறும் இந்தப் பாடநெறி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உறவுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இப்பாடநெறி நடத்தப்படுகிறது.

பாதுகாப்புக் கொள்கையின் நடைமுறை அம்சங்கள், வளர்ந்து வரும் இராஜதந்திர சூழல் மற்றும் பாதுகாப்பு இணைப்பாளர்களின் பன்முகப் பங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த ஆண்டு நீட்டிக்கப்பட்ட பாடத்திட்டம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் சமீபத்திய முன்னேற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த பயிற்சி, பாதுகாப்பு ஆலோசகர்களின் முக்கிய பொறுப்புகளை முழுமையாக உள்ளடக்கியது, பங்கேற்பாளர்கள் இருதரப்பு மற்றும் பலதரப்பு பாதுகாப்பு இராஜதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான திறன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட அல்லது வருங்கால பாதுகாப்பு ஆலோசகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பாடநெறி, உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அவசியமான இராஜதந்திர, மூலோபாய மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான திறன்களின் வளர்ச்சியை வலியுறுத்துகிறது. இந்த முறைமையில் கல்வி விரிவுரைகள், பயிற்சியாளர் தலைமையிலான அமர்வுகள், உருவகப்படுத்துதல் பயிற்சிகள் மற்றும் கள விஜயங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கும். அதன் வடிவம் நிகழ்நேர பாதுகாப்பு சூழ்நிலைகளில் அறிவுப் பகிர்வு மற்றும் பகுப்பாய்வு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் மூலோபாய உரையாடலை ஊக்குவிப்பதில் நாட்டின் வளர்ந்து வரும் பங்கையும் இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]