இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு நேற்றுக் (15) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ஜூன் 10ஆம் திகதி வரை அவ்விறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கைத்தொழிலுக்காக அவசியமான அயடீன் அல்லாத உப்பு மற்றும் உணவுக்கு எடுக்கும் அயடீன் கலந்த உப்பு இறக்குமதிக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.