திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு
  • :
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (14) வெசாக் நிகழ்வானது மாவட்ட செயலகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
 
இதன்போது தொடர்ந்து பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டு மேடையை அலங்கரித்தன. பக்தி கீதங்களில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் பலரும் இந்த பக்தி கீதங்களில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், அரச உயரதிகாரிகள் , அரச உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]