இலங்கை - நேபாள பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு

இலங்கை - நேபாள பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு
  • :

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – நேபாள பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமாகிய (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – நேபாள பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் (17) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான நேபாள தூதுவர் கௌரவ (கலாநிதி) புர்ணா பஹதூர் நேபாளி அவர்கள் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதன்போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன இலங்கை – நேபாள பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர், இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான பொருளாதார, கலாச்சார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை கொண்ட 68 ஆண்டுகால நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டினார். மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் கல்வி, சமயம், கலாசாரம், மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த நட்புறவு சங்கம் குறிப்பாக கொள்கைக் கலந்துரையாடல், அறிவுப் பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வழி வகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். நேபாளத்தின் பௌத்த பிக்கு மாணவர்கள் இலங்கையில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகளை வழங்கியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
தன் மீது நம்பிக்கை வைத்து தலைவராகத் தெரிவு செய்தமை தொடர்பில் நட்புறவுச்சங்கத்தின் புதிய தலைவர் கௌரவ அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த சங்கத்தின் ஊடாகப் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் மேலும்

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]