கண்டி கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் மிகவும் சரியான முறையில் இடம்பெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிப்பு

  • :

.

 

 

 

கண்டி நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் மிகவும் சரியான முறையில் இடம்பெறுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

 

மழையுடன் குப்பைகளை சேகரிக்கும் வாகனம் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு தடவை பிரதேசம் முழுவதும் உள்ள குப்பைகளை சேகரித்தவாறு செல்வதாகவும் அதற்கு மேலதிகமாக தள்ளு வண்டி மூலம் பிரதான மத்திய நிலையங்களில் குப்பை சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் அப்பிரதேசத்திற்கு பொறுப்புக் கூறுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

அந்த பொறுப்பு வாய்ந்த அதிகாரி கழிவு முகாமைத்துவத்தின் சிக்கல்களை தீர்ப்பதற்கு உடனடியாக அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதுடன் அதனை தெரிந்து கொண்ட ஐந்து அல்லது 10 நிமிடங்களுக்குள் அப்பிரதேசத்தை சுத்தம் செய்வார்.

 

அது தவிர வீதியோர வியாபாரிகள் அனைவரும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

 

கழிவு அல்லது உணவு குடிபானம் தொடர்பாக பொது மக்களின் பிரச்சினைகளை அனுப்புவதற்கு கியூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அது அப்பிரதேசம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தேவையானவர்களுக்கு அந்த க்யூ ஆர் குறியீட்டை கேன் செய்து அதன் புகைப்படத்துடன் அல்லது முறைப்பாடு மற்றும் யோசனைகளை முன்வைக்க முடிவதுடன் அந்த பொதுமக்கள் முறைப்பாடுகள் தொடர்பாக 10 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கண்டி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

 

==

Related Articles