கண்டி நகரை அழகுபடுத்துவோம் Kandy Breeze Night Fest வேலைத் திட்டத்தின் இதுவரையான முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ் வி எஸ் அபய கோன் தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்றது.
கண்டி நகரத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரவு சந்தை மூன்றாவது கட்டம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் பிணர போயா தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் நடைபெறாது என்றும் எதிர்வரும் 13-ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது


